Event Details

14.04.2021 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு> தூய நெஞ்சக் கல்லூரியில் உள்ள கரேஞோ அரங்கில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா எழுதிய 12 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு ..சிவன் அருள்> ..> அவர்களும் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு ரவிக்குமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் பரிதி பதிப்பகம் வெளியிட்ட முனைவர் கி.பார்த்திபராஜா அவர்களின் கலை> இலக்கியம்> இசை> நாடகம்> பண்பாடு> வரலாறு> தத்துவம்> ஆய்வியல் தொடர்புடைய 12 நூல்களை துறைசார் வல்லுநர்கள் வெளியிட; ஒவ்வொரு நூலினையும் இரண்டு சிறப்பு அழைப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர். தூய நெஞ்சக் கல்லூரியின் இல்லத்தந்தை அருதிரு முனைவர் ஜான் அலெக்ஸ் மற்றும் கல்லூரி முதல்வர் அருட்திரு முனைவர் தா. மரிய ஆண்டனி ராஜ் அவர்களும் நூலாசிரியரை வாழ்த்தினர். இறுதியாக முனைவர் கி.பார்த்திபராஜா ஏற்புரை வழங்கினார். நிகழ்வை வழக்கறிஞர் சினேகா பார்த்திபராஜா தொகுத்து வழங்கினார்.