Event Details

தூய நெஞ்சக்கல்லூரியின் வீரமாமுனிவர் தமிழ்மன்றத்தின் சார்பாக 18.07.2024 பிற்பகல் 2.15 மணிக்கு அன்னை தெரெசா அரங்கில்உலக மொழிகளும் தமிழும்: சிந்தனை அரங்கம்நிகழ்ச்சி இறைவாழ்த்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளர்   முனைவர் . மோகன்காந்தி வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் (சுழற்சி -1)          முனைவர் கி.பார்த்திபராஜா உலக மொழிகளில் தமிழின் சிறப்பிடம் குறித்துத் தலைமையுரையாற்றினார். சுழற்சி -2இன் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் . சரளாதேவி வாழ்த்துரை வழங்கினார்.

                நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திராவிடப் பல்கலைக் கழகத்தின் (குப்பம், ஆந்திரா) மொழியியல் துறைத்தலைவர் முனைவர் கணேசன் அம்பேத்கர் சிறப்புரை ஆற்றினார். தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்புகள், உலகளாவியத் தமிழ்மொழிக் குறித்த மதிப்பீடுகள், இன்றைய இளைஞர்கள் மொழியியல் ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கல்கள், வேலைவாய்ப்பு, தமிழோடு சேர்த்துப் பிறமொழிகளையும் குறிப்பாக ஆங்கில மொழியைக் கற்க வேண்டியதின் அவசியம் குறித்து மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் உரையாற்றினார்.

                நிகழ்ச்சியின் நிறைவாக வீரமாமுனிவர் தமிழ் மன்றச்செயலர் செல்வி ரித்திகா நன்றியுரை வழங்கினார்.